வேலூரை பார்த்தால் 2021 தேர்தலில் திமுக தேறாது: அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்
வேலூர் தேர்தல் முடிவுகளை பார்க்கும்பொழுது 2021 தேர்தலில் திமுக தேறாது எனத் தெரிகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘திமுகவை பொறுத்தவரை தேய்பிறையாக இருக்கிறது; அதிமுகவை பொறுத்தவரை வளர்பிறையாக உள்ளது. வேலூரில் எங்களை பொறுத்தவரை அதிமுக தான் வென்றது. வேலூர் தேர்தலில் மக்களின் மனதை அதிமுக வென்றுள்ளது’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆந்திர முதலமைச்சரை சந்தித்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் கூட்டாக அளித்த பேட்டியில், ‘தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் தருவதற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். 8 டிஎம்சி தண்ணீரை தருவதாக ஜெகன்மோகன் உறுதியளித்துள்ளார்’ என்றனர்.
newstm.in
newstm.in