Logo

சென்னை வந்த பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி அளித்த கோரிக்கை மனு 

கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று, சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்த மனுவில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
 | 

சென்னை வந்த பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி அளித்த கோரிக்கை மனு 

கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று, சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்த மனுவில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இன்று சென்னை வந்த பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.  ‘நடந்தாய் வாழி’ காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.9,927 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும். ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் தர வேண்டும். தமிழகத்தில் முக்கிய திட்டங்களை செயல்படுத்த நிலுவையில் உள்ள ரூ.7,825 கோடியை விடுவிக்க வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் சேலம் - சென்னை இடையே மாலையிலும், கோவையில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP