போலீஸ் மிருகத்தனம் , ஒரு கொடூரமான குற்றம் !! சாத்தான் குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கண்டனம்...
சாத்தான்குளம் அரசரடி விநாயகா் கோயில் தெருவைச் சோந்தவா் ஜெயராஜ் (58). இவா், மரக்கடையும், இவருடைய மகன் பென்னிக்ஸ் (31) செல்லிடப்பேசி கடையும் நடத்தி வந்தனா். இருவரும் பொது முடக்க விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு , கடந்த 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா்.
சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரின் தாக்குதல் காரணமாகவே இவா்கள் உயிரிழந்ததாகக் கூறி, காவல் துறையினரை கண்டித்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடா்பாக உதவி ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் , ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Police brutality is a terrible crime. It’s a tragedy when our protectors turn into oppressors. I offer my condolences to the family of the victims and appeal to the government to ensure #JusticeForJeyarajAndFenix https://t.co/sVlqR92L3p
— Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2020