லடாக்கில் திறக்குறள் பேசிய பிரதமர் மோடி !!
லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு. நமது வீரர்களின் தியாகம் இந்தியாவின் பலத்தை உலகறிய செய்துள்ளது. மலை சிகரங்களை விட இந்திய வீரர்களின் துணிச்சல் உயரமானது.
வீரர்களின் தியாகத்தை நாடு ஒரு போதும் மறக்காது. கடினமான பாறைகளை விட நமது தீர்மானம் உறுதி கொண்டதாக இருக்க வேண்டும். நமது நாட்டை பாதுகாக்க எந்த தியாகத்திற்கும் தயாராக உள்ளோம்.
நமது ராணுவ வீரர்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பெருமையடைய செய்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு நமக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். லடாக் முதல் கார்கில் வரை உங்களின் வீரத்தை அறிய செய்துள்ளீர்கள். நமது எதிரிகளின் சதி திட்டம் ஒரு போதும் வெற்றி பெறாது.
எதிரிகளுக்கு ராணுவ வீரர்கள் தக்க பாடம் நடத்தியுள்ளனர். பலவீனமானவர்கள் ஒரு போதும் அமைதிக்கான முயற்சியை எடுக்க மாட்டார்கள். மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு என வீரர்களின் மத்தியில் , திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேசினார்.
Newstm.in