1. Home
  2. தமிழ்நாடு

பைக் திருட்டு வழக்கில் சிக்கிய மதபோதகர்! வச்சி வெளுத்த போலீஸ்!!

பைக் திருட்டு வழக்கில் சிக்கிய மதபோதகர்! வச்சி வெளுத்த போலீஸ்!!


மதுரையில் பைக் திருட்டில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தேனியைச் சேர்ந்த விஜயன்(எ) சாமுவேல் மதுரை தனக்குளம் அருகிலுள்ள பர்மா காலனி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கிறிஸ்துவ சபை ஒன்றை நடத்தினார். அப்போது அவர் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை திருடியதாக தெரிகிறது. சில தினத்துக்கு முன், திருடிய பைக்கை சுப்ரமணியபுரம் பகுதியிலுள்ள மெக்கானிக் ஒருவர் மூலம் விற்க முயன்றார். பைக் குறித்த விவரங்களை கேட்ட போது, சரியான விவரம் தெரிவிக்க முடியாமல் திணறினார். சந்தேகமடைந்த மெக்கானிக் சுப்ரமணியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் சாமு வேலுவை பிடித்தனர்.


விசாரணையில், அவர் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஏராளமான இரு சக்கர வாகனங்களை திருடியது தெரிந்தது. இவற்றில் 3 வாகனங்களை தேனியிலுள்ள அவரது தந்தையிடம், ஒரு வாகனத்தை அவரது நண்பருக்கு இலவசமாக கொத்திருப்பதும் தெரிந்தது. பிற வாகனங்களை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விஜயன் மற்றும் அவருக்கு உதவிய திருநகரைச் சேர்ந்த செல்வம்  ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 12  வாகனங்களை பறிமுத ல் செய்தனர். 

newstm.in

Trending News

Latest News

You May Like