உத்தரபிரதேசத்தில் ரயிலை அடித்து நொறுக்கிய பயணிகள்..!
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி ரயில் நிலையத்தில் கோபமடைந்த பயணிகள் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை செல்லும் அந்த்யோதயா விரைவு ரயிலின் (15101) கதவுகள் நீண்ட நேரம் பூட்டப்பட்டிருந்ததால், ஏறி இருக்கையில் அமர்ந்து காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்தனர். இதனால், கதவு கண்ணாடியை கற்களால் உடைத்து ஜன்னல் கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பியை வளைக்க முயன்றனர்.
ஒரு பயணி தனது கையிலிருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து, ரயிலின் மூடிய கதவின் கண்ணாடியை உடைக்க, மற்றவர்கள் ஜன்னல் கண்ணாடியிலிருந்து இரும்பு கம்பியை அகற்றுவதை வீடியோ காட்டுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டும், ரயிலின் கதவுகள் திறக்கப்படாததால், பயணிகள் ரயிலை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
In a disturbing incident caught on camera, angry passengers were seen vandalizing a train and shattering its windows in #UttarPradesh.#TrainVandalism #UPIncident #Overcrowding #BastiRailway #PassengerOutrage #TrainSafety #ViralVideo #IndianRailways pic.twitter.com/EdDI3vMuSh
— The Cheshire Cat (@C90284166) December 20, 2024