1. Home
  2. தமிழ்நாடு

அதிரடி உத்தரவு! இங்கெல்லாம் நாளை முதல் இரவு ஊரடங்கு!!

அதிரடி உத்தரவு! இங்கெல்லாம் நாளை முதல் இரவு ஊரடங்கு!!


கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 8 இடங்களில் நாளை முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக கொரோனா பாதிப்பு இருக்கிறது.

இதில் கர்நாடாகவில் கடந்த முறையும் அதிக பாதிப்பு இருந்த நிலையில் இந்த முறையில் பாதிப்பு தினம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகளுடன் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதிரடி உத்தரவு! இங்கெல்லாம் நாளை முதல் இரவு ஊரடங்கு!!

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட 8 இடங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரவுநேர ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு என்று சொல்லாமல் கொரோனா ஊரடங்கு என்று சொல்ல வேண்டும் என்ற பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like