உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு கைவந்த வேலை - அமைச்சர் சாமிநாதன்..!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவுக்கு அமைச்சர் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகரில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகிறது. 2 ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் 3-வது ஆண்டில் அனுமதிக்கக்கூடாது. 2023-24-ல் பங்கேற்ற தமிழக அரசின் ஊர்திகள் இனி 2026-ல் தான் பங்கேற்க முடியுமென்பதே மத்திய அரசின் நடைமுறை.
நடைமுறையை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றவில்லை. உ.பி., குஜராத்திற்கு தொடர்ந்து 3-வது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயம் அற்ற செயல். அரசியல் நடைமுறை அறியாமல் உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு கைவந்த வேலை. அரசுக்கு ஆக்கப்பூர்வ யோசனை, கருத்துகளை கூறி எதிர்க்கட்சி தலைவர் பதவிக்குரிய மரியாதையை இபிஎஸ் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.