இந்த அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க!20 லட்சமாக மாறும் 10 லட்சம் ரூபாய்..!
தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது மட்டுமில்லாமல் அதிக வருமானமும் தருகின்றன. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சம், முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்க உத்தரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ. 10 லட்சத்தை முதலீடு செய்தால், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ரூ. 20 லட்சம் கிடைக்கும். நீண்ட காலத்திற்கு பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் (அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள்) இரட்டிப்பாகும். தற்போது, இந்தத் திட்டம் 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது தவிர, இந்தத் திட்டத்தில் முதலீட்டை குறைந்தபட்சம் 1000 ரூபாயில் தொடங்கலாம். முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. அதாவது, உங்கள் திறனுக்கு ஏற்ப எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் கடந்த 1988ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு அவர்களின் முதலீட்டில் இரட்டிப்பு வருமானத்தை வழங்குவதாகும். முன்னதாக, இந்த திட்டம் விவசாயிகளுக்கு மட்டுமே இருந்தது. அதன் பின்னர்தான் இத்திட்டம் சாதாரண குடிமக்களுக்கும் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒற்றைக் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்குகளைத் திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கணக்கு தொடங்கும் வசதியும் உள்ளது.
உங்கள் குழந்தைக்கு கிசான் விகாஸ் பத்ரா கணக்கைத் திறக்க விரும்பினால் ஆதார் அட்டை (குழந்தை மற்றும் பெற்றோர் இருவருக்கும்), குழந்தையின் வயது சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், KYC படிவம் ஆகிய ஆவணங்கள் மூலம் உங்கள் குழந்தைக்கான கணக்கை எளிதாகத் திறக்கலாம். இந்த திட்டம் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். NRIகள் (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்) இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.