1. Home
  2. தமிழ்நாடு

எந்த கிழமை பவுர்ணமி தரிசனம் யாருக்கு நல்லது தரும்?

எந்த கிழமை பவுர்ணமி தரிசனம் யாருக்கு நல்லது தரும்?

நம்முடைய வாழ்க்கை நல்லமுறையில் மகிழ்ச்சியாக இருந்தால் , முகமும் மனதும் வெளிச்சம்மிகுந்ததாகிறது.வாழ்வின் சகல நல்ல அம்சங்களையும் ஐஸ்வர்யங்களையும் ஒளி மிகுந்த வெளிச்சத்துடன் ஒப்பிடுவது காலங்களை கடந்து நம் பாரம்பர்யத்தில் தொடர்கிறது.

சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது பவுர்ணமி நாளில் ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் பவுர்ணமி யோகம் உண்டாகிறது. பொதுவாக ஜோதிட சாஸ்திரங்களில் சந்திரன் அம்பாளின் அம்சமாக சொல்லப்படுகிறது.கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற பவுர்ணமி நாளில் கடல் தன் இயல்பு நிலையில் இருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கிறது.

பவுர்ணமி நாளில், கடல் அலைகளை போல மன உறுதி இல்லாத மனிதர்களின் மனமும் அமைதியில்லாமல் அலை பாய்கிறது. அடிப்படையில் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன், என்பதாலேயே பவுர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது.

ஸ்ரீசக்கர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக பவுர்ணமி தினத்தில் மகா திரிபுர சுந்தரியாக அருள்பாலிகிறார் என்பது ஐதீகம்.

நம் துக்கங்களையும், தடைகளையும், இடையூறுகளையும், நோய், நொடிகளையும், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீவினைகளையும், கிரக தோஷங்களையும் போக்கும் எளிய வழி பவுர்ணமி வழிபாடு . பவுர்ணமி அன்று துர்க்கா தேவியை வழிபட்டு நம் வாழ்க்கையை வளமாக்கி கொள்ளலாம்.

பவுர்ணமி வரும் கிழமைகளும் –சிறப்புகளும்

ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி : சூரியனுக்கு ஏற்றதாகும். சூரிய திசை நடப்பவர்கள், சூரிய தோஷம் உள்ளவர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் இந்த நாளில் துர்க்கைக்கு சிகப்பு புடவை அல்லது சட்டைத் துணி சாற்றி, செந்தாமரை மலர் வைத்து, அர்ச்சனை செய்து வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். இதனால் தீராத நோய்கள் தீரும்

திங்கட்கிழமை பௌர்ணமி : திங்கள் என்பதே சந்திரணை குறிக்கும் நாள். சந்திர திசை நடப்பவர்கள், ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கடக ராசியில் பிறந்தவர்கள் துர்க்கைக்கு வெண்பட்டு, ஆரஞ்சு புடவை சாற்றி மல்லிகை பூ மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபட யோகங்கள் விருத்தியடையும். இதனால் வெளிநாட்டு பயணங்களில் இருக்கும் தடை விலகும். . மன அமைதியும், சுபகாரிய விஷயங்களும் கூடிவரும்.

செவ்வாய்க்கிழமை பவுர்ணமி: முருகப்பெருமானுக்கு உரிய தினம், அங்காரகன் எனும் செவ்வாய்க்கு ஏற்ற சிறப்பான தினம். இந்த நாளில் பவுர்ணமி அமைந்தால் செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், மிருக சீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள், 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மேஷம், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் துர்க்கை அம்மனை வழிபட யோகங்கள் வளரும். இந்த நாளில் துர்க்கை அம்மனுக்கு சிகப்பு நிற புடவை அல்லது துணி சாற்றி செவ்வரளி, சிகப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட எதிர்ப்புகள் மறையும். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். நிலம் சொத்து சேர்க்கை ஏற்படும்.

புதன்கிழமை பவுர்ணமி: புதன்கிழமை புத பகவானுக்கு ஏற்ற தினமாகும். இந்த நாளில் பவுர்ணமி அமைந்தால் புதன் திசை நடப்பவர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள், 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் துர்க்கையை வழிபட சகல யோகங்கள் கிடைக்கும். துர்க்கை அம்மனுக்கு பச்சைநிற புடவை சாற்றி மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகையால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், பஞ்சாமிர்தம் படைத்து வழிபட கல்வி தடை விலகும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மாமன் வகை உறவுகள் பலப்படும்.

வியாழக்கிழமை பவுர்ணமி: குரு பகவானுக்கு உரிய தினம் வியாழன். வியாழக்கிழமை பவுர்ணமி தினத்தில் குரு திசை நடப்பவர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் துர்க்கையை வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். இந்நாளில் துர்க்கைக்கு மஞ்சள் நிற புடவை அல்லது ஜாக்கெட் துணி சாற்றி, சாமந்தி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம், பழங்கள் படைத்து பக்தர்களுக்கு வழங்கினால் சுபகாரியத் தடைகள் விலகும். மேலும் தோஷங்கள் நீங்கும். செல்வாக்கு, பொன், பொருள் சேர்க்கை கூடும்.

வெள்ளிக்கிழமை பவுர்ணமி: வெள்ளி என்றாலே அது சுக்கிரனுக்கு ஏற்ற தினம்,வெள்ளிக்கிழமை பவுர்ணமி நாளில் , திருமணத் தடை, களத்திர தோஷம் உள்ளவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசியில் பிறந்தவர்கள், துர்க்கைக்கு வெண்பட்டு புடவை சாற்றி மல்லிகைப்பூ, கதம்ப பூமாலை, பழ வகைகள் நிவேதனம் செய்ய சகல யோகங்கள் விருத்தியடையும். பிரிந்த தம்பதியர் சேருவார்கள். தடைபட்ட கட்டிட வேலைகள் வேகமெடுத்து விரைவில் பூர்த்தியாகும் .

சனிக்கிழமை பவுர்ணமி: சனிக்கிழமை, சனீஸ்வரருக்கு ஏற்ற தினமாகும். சனிக்கிழமை பவுர்ணமி நாளில் நாவில் சனி, அஷ்டம சனி, ஏழரை சனி மற்றும் சனி திசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மகரம், கும்ப ராசியில் பிறந்தவர்கள் துர்க்கை அம்மனுக்கு நீலநிற புடவை அல்லது நீலத்துணி சாற்றி மரிக்கொழுந்து, சங்கு பூ, கதம்ப மாலை அர்ச்சனை செய்தால் தீராத நோய், நொடிகள் தீரும். மன அமைதி ஏற்படும். கிரக தோஷம் விலகும்

newstm.in

Trending News

Latest News

You May Like