1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதியில் பக்தர்களுக்கு புது விதிமுறைகள் அமல்!

திருப்பதியில் பக்தர்களுக்கு புது விதிமுறைகள் அமல்!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பல மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

திருப்பதியில் பக்தர்களுக்கு புது விதிமுறைகள் அமல்!

தரிசன டிக்கெட் பெற்று நடைபாதை மூலம் திருமலைக்கு வர விரும்புபவர்கள் தரிசன நேரத்திற்கு 24 மணி நேரத்துக்கு முன்னால் தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள் மதியம், 1:00 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இதுகுறித்து முன்னறிவிப்பு இல்லாததால் வழக்கம் போல் திருமலையில் குவிந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சோதனைச் சாவடியில் வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like