1. Home
  2. தமிழ்நாடு

கருணையற்ற காமுகன்... சிறுமியை  3 மாதம் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை!

கருணையற்ற காமுகன்... சிறுமியை  3 மாதம் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை!


சென்னையில் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமிக்கு உதவுவதாக கூறி அழைத்துச்சென்று ஒருவர்  3 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது பாட்டியுடன் வசித்து வந்த அச்சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி பாட்டியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த அவரை திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் வெங்கடேசன் சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கருணையற்ற காமுகன்... சிறுமியை  3 மாதம் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை!
இந்நிலையில் வெங்கடேசனின் தாய் சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளார். வெங்கடேசன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்ற நேரம் பார்த்து அந்த தாய், சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இதையடுத்து திருத்தணி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமியை பார்த்த ரயில்வே போலீசார் அவரை மீட்டு சிறுமிக்கு நடந்த கொடூரத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். மீட்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேசனை  போலீசார் தேடி வருகின்றனர். 

newstm.in

Trending News

Latest News

You May Like