இன்று கிருத்திகை! இந்த மந்திரத்தை சொல்வது விசேஷம்!!
இன்றைய நாள் முருக பக்தர்களுக்கு மிகவும் விசேஷமான நாள். முருகனுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்திருப்பது விசேஷம் தானே. இத்தகைய சிறப்பு மிக்க நாளில் அகஸ்தியர் அருளிய முருகப்பெருமானின் ஷண்முக சடாட்சரம் மந்திரத்தை சொல்வோம்.... பலன் பெறுவோம்.
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே
ஒரு வேலையை செய்ய கிளம்பும் முன் இந்த மந்திரத்தை, ஜெபித்து நெற்றியில் திருநீறு அணிந்து செல்ல காரியம் வெற்றியடையும்.
newstm.in