1. Home
  2. தமிழ்நாடு

உலகக் கோப்பையை , 37 ஆண்டுகளுக்கு முன்பு வென்றது இதே நாளில் தான்...

உலகக் கோப்பையை , 37 ஆண்டுகளுக்கு முன்பு வென்றது இதே நாளில் தான்...


37 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், கிரிக்கெட் தொடர்பான அனைத்தும் இந்தியாவில் மாறிவிட்டன. லார்ட்ஸில் ப்ருடென்ஷியல் கோப்பை என்று அழைக்கப்படும் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது.

கபில் தேவின் டீம் இந்தியா அனைத்து முரண்பாடுகளையும் மீறி நட்சத்திரம் நிறைந்த கிளைவ் லாயிட்டின் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெறும் உறுதியுடன் இருந்தாலும் , இந்திய அணி அச்சமின்றி எதிர்கொண்டு பந்தாடியது.

உலகக் கோப்பையை , 37 ஆண்டுகளுக்கு முன்பு வென்றது இதே நாளில் தான்...

இறுதிப்போட்டிக்கான பயணத்தில், இந்தியா ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள மான்செஸ்டருக்கு புறப்பட்டது. இங்கிலாந்து 60 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலில் பந்து வீசிய இந்திய அணி சார்பில் கபில்  மூன்று விக்கெட்டுகளையும் ரோஜர் பின்னி, மொஹிந்தர் அமர்நாத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் ஷ்யபால் சர்மா மற்றும் சந்தீப் பாட்டீல் அரைசதம் அடித்து, இந்தியா ஆறு விக்கெட்டுகளை இழந்தும் இலக்கை அடைய உதவினர்.

இதன் மூலம் யாரும் எதிராபாராத நிகழ்வாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இடம் பிடித்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸுடன் மோத புறப்பட்டது.

இறுதிப் போட்டிக்கு டீம் இந்தியாவுக்கு இது ஒரு கனவான பயணமாக இருந்தது. ஏனெனில் இளம் அணி ஒருபோதும் கோப்பையை வெல்லும் உறுதிகொண்டவர்களாக கருதப்படவில்லை. ஆனால் கபில் தேவ் மோதலுக்காக லார்ட்ஸில் டாஸில் கிளைவ் லியோட் உடன் நின்று கொண்டிருந்தார்.

டாஸ் வென்ற லாயிட் இந்தியாவை பேட்டிங் செய்ய வைத்தார். நம்பிக்கை நட்சத்திரம் சுனில் கவாஸ்கர் வந்த வேகத்தில் வெளியேறினார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மாபெரும் கரீபியன் பந்து வீச்சாளர்கள் மீது தனது தடையற்ற தாக்குதல் உள்ளுணர்வை கட்டவிழ்த்து விட்டார். ஸ்ரீகாந்தின் கேமியோ இந்தியா 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு வலம் வர உதவியது.

ஆனால் கோர்டன் கிரீன்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கிளைவ் லாயிட் ஆகியோருக்கு எதிராக இது ஒருபோதும் போதுமானதாக இருக்காது என்பதால் இந்தியா வெற்றி பெரும் என யாரும் நினைக்கவில்லை.

அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கிரிக்கெட் அந்த நாளில் கணிக்க முடியாத விளையாட்டு என்று அப்போதுதான் நிரூபிக்கப்பட்டது. லார்ட்ஸில் நடந்த 60 ஓவர்கள் ஆட்டத்தில் வெற்றிக்கு 184 ஓட்டங்களைத் துரத்திய, சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் 50 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் , 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி நடையை கட்டியது.

இறுதிப்போட்டியில் ஆல்ரவுண்டர் மொஹிந்தர் அமர்நாத் 26 ரன்கள் எடுத்ததோடு, ஏழு ஓவர்களில் வெறும் 12 ரன்களுக்கு மூன்று முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் சரிவைத் தூண்டி ஆட்ட நாயகன் விருது வென்றார். அவர்களின் கனவான வெற்றிக் கதை இந்திய கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் மாற்றியதால் கபிலின் டெவில்ஸ் தேசிய வீரர்களாக மாறினர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like