தமிழகத்தில் சமூகத் தொற்று உள்ளதா? : அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் செய்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆர் பாரட்டும் வகையில் நமது செயல்பாடு உள்ளது என்றும், தொற்று ஏற்பட்டால் மக்கள் பயப்பட வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் மிக கவனமாகவும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அமைச்சர், தமிழகத்தில் சமூக தொற்று நிச்சயம் ஏற்படவில்லை என உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், பிளாஸ்மா தெரப்பிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
newstm.in