1. Home
  2. தமிழ்நாடு

சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது !! பிரதமர் மோடி

சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது !! பிரதமர் மோடி


இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. நமது இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

கொரோனா பரவல் எப்போது முடியும் என்பது தான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது !! பிரதமர் மோடி

ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

நாடு சவால்களை சந்தித்து வரும் இந்த கால கட்டங்களில் பல்வேறு புதிய உருவாக்கங்களும் நடைபெற்றுள்ளன. சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்பு துறையிலும் நாடு சுயசார்பு அடைய வேண்டும்.

Newstm.in

Trending News

Latest News

You May Like