1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா - சீன எல்லை பிரச்சனை எதிரொலி !! பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்...

இந்தியா - சீன எல்லை பிரச்சனை எதிரொலி !! பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்...


இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த கருத்துக்கள் , சீன சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தியா - சீன எல்லை பிரச்சனை எதிரொலி !! பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்...

சீனாவில் வெய்போ மற்றும் வி-சாட் ஆகிய செயலிகள் பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை சீனாவின் பிரபல சமூக ஊடக செயலியான வி-சாட் நீக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த சமூக ஊடகம் சார்பில் தெரிவிக்கையில் ; அரசு ரகசியங்களை தெரிவிக்கக்கூடாது. தேச பாதுகாப்புக்கு ஆபத்து நேர விடக் கூடாது என்ற காரணத்தால் இந்த பதிவுகளை நீக்கி உள்ளோம் என்று கூறியுள்ளது.

முன்னதாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியான இந்திய - சீன எல்லை நிலவரம் பற்றிய மோடியின் கருத்துகள், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை மந்திரி இடையே நடைபெற்ற தொலைபேசி வழி உரையாடல் , வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் அறிக்கை போன்றவை வி-சாட் சமூக ஊடகம் முன்னதாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Trending News

Latest News

You May Like