1. Home
  2. தமிழ்நாடு

கணவன் , மனைவி பிரச்சனை !! மனைவியின் தலையை தனியாக வெட்டி , தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

கணவன் , மனைவி பிரச்சனை !! மனைவியின் தலையை தனியாக வெட்டி , தலையுடன் காவல் நிலையத்தில் சரண்


ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சத்தேனபள்ளி பகுதி என் எஸ் பி கால்வாய் பகுதியில் வசிப்பவர் சீனிவாசராவ் (46). இவர் மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

வீட்டில் கணவன், மனைவியிடையே தகராறு நடந்தது. இதனால் சத்தென பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்வதாக கூறி மனைவி வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவர் என்.எஸ்.பி விருந்தினர் மாளிகை பகுதிக்கு வந்த போது பின்புறமாக வந்த சீனிவாசராவ், தான் எடுத்து வந்த கத்தியால் மனைவியின் வெட்டினார்.

உடனே துடித்துடித்து மனைவி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனைவியின் தலையை தனியாக வெட்டி எடுத்து தலையுடன் நேராக சத்தேனபள்ளி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.

அதிர்ச்சிஅடைந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like