1. Home
  2. தமிழ்நாடு

பெண் கூலித் தொழிலாளியின் மனிதாபிமானம்... சல்யூட் அடித்த டிஜிபி!

பெண் கூலித் தொழிலாளியின் மனிதாபிமானம்... சல்யூட் அடித்த டிஜிபி!


ஆந்திர மாநில கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த துனி நகரில் வெயிலில் நின்று வேலை பார்த்து கொண்டிருந்த காவல்துறையினருக்கு, கூலித் தொழிலாளி பெண் ஒருவர் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாதம் வெறும் ரூ.3500 மட்டுமே சம்பாதிக்கும் லோகமணி அந்த பெண், காவல்துறையினர் வெயிலில் நின்று கால்கடுக்க மக்களுக்காக பணியாற்றுவதை கண்டு, தனது அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக கூல்டிரிங்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்த பெண்ணை டிஜிபி சவாங் பாராட்டினார். வீடியோ காலில் அந்த பெண்ணுடன் பேசிய டிஜிபி, சல்யூட் அடித்து பாராட்டு தெரிவித்தார். 

newstm.in

Trending News

Latest News

You May Like