கொரோனாவிற்கு பிறகு இந்தியாவை புரனமைத்தல் எப்படி !! கமல் டிவிட்
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் அவர்கள் கொரோனாவுக்கு பிறகு புரனமைத்தல் எப்படி ? என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ;
சுகாதாரத் துறையே புதிய பாதுகாப்பு துறை , உழவனுக்கு வந்தனை செய்வோம், அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துங்கள். வறுமை ஒழிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல திட்டங்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? pic.twitter.com/gFvffds80a
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2020
மேலும் இந்தியாவை வல்லரசு நாடாக்கும் கனவை நோக்கி பயணிக்கும் நேரம் இது என்ற பல நீண்ட கோரிக்கைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
Newstm.in