சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக எவ்வளவு ?
சென்னையில் இதுவரை 37,070 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 19,686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 501 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 16,882 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,828 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்டையார் பேட்டையில் 4,743 பேரும் , தேனாம்பேட்டையில் 4,504 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக மணலி மண்டலத்தில் 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/jH8tFzg0t2
— Greater Chennai Corporation (@chennaicorp) June 19, 2020
சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு விவரம் ; ராயபுரம் - 5,828 தண்டையார்பேட்டை - 4,743 தேனாம்பேட்டை - 4,504 கோடம்பாக்கம் - 3,959 அண்ணா நகர் - 3,820 திரு.வி.க.நகர் - 3,244அடையாறு - 2,144 வளசரவாக்கம் - 1,571 திருவொற்றியூர் - 1,370அம்பத்தூர் - 1,305 மாதவரம் - 999ஆலந்தூர் - 781பெருங்குடி - 729சோழிங்கநல்லூர் - 707 மணலி - 525 ஆக உள்ளது.
Newstm.in