சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக எவ்வளவு ?
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டுமே அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் , சென்னையின் மொத்த பாதிப்பு 24,545 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் , சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/hEWThLconJ
— Greater Chennai Corporation (@chennaicorp) June 10, 2020
அதிகபட்சமாக, ராயபுரத்தில் 4,192 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து , தண்டையார் பேட்டையில் 3192 பேருக்கும், தேனாம்பேட்டையில் 2,846 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 2,656 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,351 பேருக்கும், அண்ணா நகரில் 2,178 பேருக்கும், அடையாறில் 1,411 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,136 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Newstm.in