தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது ; தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெப்ப சலனத்தின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். அடுத்த 4 நாட்களுக்கு தென்மேற்கு , மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ வரை வீசக்கூடும். எனவே மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Newstm.in