"விஜய்க்கு அடுத்து இவர் தான் ஃபேவரட்..." : மாஸ்டர் நாயகி ஓபன் டாக்!
பேட்ட திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். படம் இன்னும் ரிலீஸாகவில்லை என்றாலும் கூட மாளவிகா மிகவும் பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் அவர் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பது தான்.
ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிப்பது, நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக உள்ளார். இவர் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், விஜயக்கு அடுத்ததாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். அதே போல் தான் ரொம்ப ரொமான்டிக்கானவள் என்றும், ரொமான்டிக் என்பதால் தனக்கு இரவு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். இரவு நேரங்களில் அவுட்டிங், நண்பர்களுடன் சாட்டிங் பிடிக்கும் என்றும், நிறைய ரொமான்டிக்கான படங்களில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
newstm.in