1. Home
  2. தமிழ்நாடு

மகிழ்ச்சி!!  சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் துவங்கியது! இன்று 1,261 பேர் பாதிப்பு!



சென்னையில் தினந்தோறும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று, குறையத் துவங்கி சென்னைவாழ் மக்களின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 1,261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அளவில் இன்று பாதிக்கப்பட்டுள்ள 3756 பேரில் 1,261 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. 

சென்னையில் இதுவரை 49587 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 21,766 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like