குட் நியூஸ்... தமிழகத்தில் அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 60.61% ஆக இருக்கிறது. இதுவரை 12 வயது வரையிலான குழந்தைகள் 6063 பேரும், 13-60 வயது உடையவர்கள் 101452 பேரும், 60 வயதுக்கு அதிகமானவர்கள் 14835 பேரும் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
newstm.in