1. Home
  2. தமிழ்நாடு

கரடியுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பெண்! வைரல் வீடியோ!!

கரடியுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பெண்! வைரல் வீடியோ!!


மெக்சிகோவில் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அவர்கள் முன்பாக வந்த கரடியுடன், அச்சமின்றி செல்ஃபி எடுத்த இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.  

சிபின்க்கி எனும் இயற்கை விலங்கியல் பூங்காவில் மூன்று இளம்பெண்கள் நடந்து சென்ற போது, அவர்கள் முன்பு எதிர்பாராதவிதமாக கரடி ஒன்று வந்தது. அப்போது அச்சத்தில் மூவரும் அசையாமல் நின்றனர். அவர்களில் ஒரு பெண்ணின் அருகில் சென்ற கரடி, அவரது தோளில் தனது முன்னங்கால்களை வைத்து நின்றுள்ளது. அதனை அச்சமின்றி அப்பெண் செல்போனில் செல்பி எடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவை, பலரும் இணையத்தில்  பகிர்ந்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like