Logo

வேலூர் தேர்தல்: மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்த அதிகாரிகள்!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, மதுக்கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 | 

வேலூர் தேர்தல்: மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்த அதிகாரிகள்!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, மதுக்கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததால், அங்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான மறுதேர்தல் வருகிற ஆகஸ்ட்5ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், அங்கு மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூர் தொகுதியில் உள்ள மதுக்கடைகளில் எந்த ஒரு நபருக்கும் பெட்டியில் மதுபானங்களை விற்பனைக் செய்யக்கூடாது என்றும் கடைகளில் அதிகமாக கூட்டம் இருக்கக்கூடாது என்றும் 30% அதிகமாக மது விற்பனையாகும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP