குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் மீட்பு பணி நடைபெறுகிறது என்று, நடுக்காட்டுப்பட்டியில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அவரின் பேட்டியில் மேலும், ‘குழந்தை சுர்ஜித்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இணைந்து மீட்பு பணி செய்து வருகின்றனர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல. நல்ல முறையில் குழந்தை மீட்கப்படும் நம்பிக்கை உள்ளது’ என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மீட்பு பணிகளை வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தற்போது பார்வையிட்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in