தமிழகத்தில் நிச்சயமாக ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது: ரஜினி
தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், என் மீது காவி சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் எப்போது வெளிப்படையாகத்தான் பேசி வருகிறேன் என்றும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாகவும் கூறினார். அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருப்பதாகவும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in