நெல் ஜெயராமனின் இழப்பு பேரிழப்பு - அமைச்சர் காமராஜ்
நெல் ஜெயராமனின் மறைவு பேரிழப்பு என உணவுதுறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு, உணவுதுறை அமைச்சர் காமராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அமைச்சர், சட்டமன்ற பேரவை கூட்டம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறுவதால், நெல் ஜெயராமன் மறைவிற்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சரால் வர இயலவில்லை.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த அர்பணிப்பு உடைய நெல் ஜெயராமன், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது விருது பெற்றார். நேற்றைய தினம் அவரது அர்பணிப்பு பணியை பாராட்டி தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. அவருடைய இழப்பு விசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜெயராமன் விவசாயத்தில் உயர்வை பெற்றார். அவரது மருத்துவ செலவை அரசே ஏற்கும் என கூறினார்.
newstm.in
newstm.in