Logo

இன்று உதயமாகிறது தென்காசி!

தமிழ்நாட்டின் புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
 | 

இன்று உதயமாகிறது தென்காசி!

தமிழ்நாட்டின் புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்து,  5,000 பயனாளிகளுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP