விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு
திண்டுக்கல்லில் பள்ளி மாணவி விடுதியில் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sep 15, 2019, 14:29 IST
| திண்டுக்கல்லில் பள்ளி மாணவி விடுதியில் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகேயுள்ள தனியார் பள்ளி விடுதியில், கொடைக்கானலை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி வர்ஷா தங்கி படித்து வந்துள்ளார். இவரை, நேற்று இரவு விடுதியில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி வர்ஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Newstm.in
newstm.in