3 நீதிபதிகளுக்கு முனைவர் பட்டம் வழங்கினார் ஜனாதிபதி!
சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
Jul 13, 2019, 17:24 IST
| சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதிகளுக்கு முனைவர் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதிபதிகள் சதாசிவம், ஷரத் அரவிந்த் பாப்டே, தஹிலரமானி ஆகியோருக்கு முனைவர் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
newstm.in
newstm.in