மீன்பிடி படகுகளுக்கு அனுமதி சீட்டு வழங்க வேண்டாம்: அமைச்சர் ஜெயக்குமார்
மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Nov 5, 2019, 21:40 IST
| மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அனுமதி சீட்டு வழங்க வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத மீனவர்கள் உடனே கரை திரும்ப தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in