திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு நாளை (மே.3) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
May 2, 2019, 17:15 IST
| ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு நாளை (மே.3) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, நாளை திருச்சி மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களிலும் மக்களை வருவார்கள்.
இதையடுத்து, நாளைய தினம் (மே.3) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக வருகிற மே 18ம் தேதி வேலை நாளாகும். அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in