Logo

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் 

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் 

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை வெளியிட்டுள்ள செய்தியில், ‘தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு  மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 செ.மீ., ராஜபாளையம் 5 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர், பாளையங்கோட்டையில் தலா 4 செ.மீ.,, கேளம்பாக்கம், சிவகிரி, ஆத்தூரில் தலா 3 செ.மீ., அவிநாசி, சேரன்மகாதேவி, தென்காசியில் தலா 2 செ.மீ., திண்டிவனம், கருமந்துறை, திருத்தணி, விளாத்திக்குளத்தில் தலா 1 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது’ என்றது வானிலை மையம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP