கனமழை: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Oct 30, 2019, 14:39 IST
| தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்து தாமதமாக அறிவிக்கப்பட்டதால், பள்ளி மாணவர்கள் பாதி வழியில் சிக்கி தவிப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Newstm.in
newstm.in