'கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை அதிகரிக்கப்படும்'
கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை அதிகரிக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Jul 28, 2019, 23:15 IST
| கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை அதிகரிக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசாவுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கோவையிலிருந்து துபாய், கோலாலம்பூர், பாங்காக்கிற்கு விமானங்களை இயக்க வேண்டுமென அமைச்சரிடம் ஆ.ராசா மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா, இலங்கைக்கு தற்போது விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
newstm.in
newstm.in