உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் (90) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
Dec 28, 2019, 00:50 IST
| உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் (90) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நீதிபதி மோகன் இன்று மாலை 6 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Newstm.in
newstm.in