குட்கா, பான்மசாலா மீதான தடை நீட்டிப்பு
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Jun 4, 2019, 02:33 IST
| தமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குட்கா, பான்மசாலா பொருட்களை தடை செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தலுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் 22-ஆம் தேதியுடன் தடை முடிவடைந்தது . இந்த நிலையில், குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடையை அடுத்த ஓராண்டுக்கு நீட்டித்து உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
newstm.in
newstm.in