வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று வங்கிப் பணியாளர் தேர்வு மையம் அறிவித்துள்ளது.
Sep 16, 2019, 22:35 IST
| பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று வங்கிப் பணியாளர் தேர்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வங்கிப் பணியாளர் தேர்வு மையம், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 எழுத்தர் பணியிடங்களுக்கு நாளை முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 12,075 எழுத்தர் பணியிடங்களுக்கான ஆன்லைன் முதல்நிலைத்தேர்வு டிசம்பர் 7,8,14,21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மெயின் தேர்வு 2020 ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும். பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அவரவர் மாநில மொழிகளிலேயே தேர்வு எழுதலாம்’ என்று அறிவித்துள்ளது.
Newstm.in
newstm.in