எனது சகாக்கள் 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்: கமல்
எனது சகாக்கள் 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Oct 8, 2019, 22:20 IST
| எனது சகாக்கள் 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பாராளுமன்றத்தில் அவர் கூறிய அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அப்படி இருக்கும் போது மாநிலங்கள் அதனை பின்பற்ற வேண்டாமா? பிரதமரின் விருப்பத்திற்கு மாறாக எனது சகாக்கள் 49 பேர் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். ஜனநாயகத்தில் நீதியை நிலைநாட்ட, பீகாரில் பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Newstm.in
newstm.in