வெங்காயம் பதுக்கினால் நடவடிக்கை: அமைச்சர் செல்லூர் ராஜூ
வெங்காயத்தை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Nov 25, 2019, 22:10 IST
| வெங்காயத்தை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ட்விட்டரில், ‘தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’ என்று பதிவிட்டுள்ளார்.
வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in
newstm.in