தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது...! வெளியே வந்தால் ஜெயில்!!
தமிழகத்தில் 5 மாநகராட்சிகள் மற்றும் 8 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் இன்று (26.04.20) முதல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (26.04.20) முதல் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நான்கு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு நாள் ஊரடங்கு பிறப்பித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் சில பகுதிகள், நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் முழு ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது. முழுமையான ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள் மட்டுமே இயங்கும் என்றும் நடமாடும் காய்கறிகள் உரிய அனுமதியுடன் வீடு தேடி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கைது செய்யப்படுவர் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
newstm.in