1. Home
  2. தமிழ்நாடு

ஃபிரெஷ்ஷான மீன்களை இனி வீட்டிலிருந்தே வாங்கலாம்! அரசின் அதிரடி திட்டம்!!

ஃபிரெஷ்ஷான மீன்களை இனி வீட்டிலிருந்தே வாங்கலாம்! அரசின் அதிரடி திட்டம்!!


சென்னை மக்கள் வீட்டிலிருந்துகொண்டே மீன்களை வாங்கும் வகையில் புதிய திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் மக்களுக்கான மீன் விற்பனை திட்டத்தினை விரிபடுத்திடும் வகையில் 'இது நம்ம ஊரு மீன்கள்' என்ற வணிக அடையாள சின்னம் அறிமுக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி Meengal என்ற செயலியும் பொதுமக்களுக்காக அறிமுகப்பட்டுள்ளது.


இதனை பயன்படுத்தி சென்னையில் சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் மீன் அங்காடிகள் மூலம் சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு மக்கள் மீன்களை வீட்டிலிருந்தே வாங்கிக்கொள்ளலாம். அத்துடன் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மீன்களை வாங்க முடியும் என்றும், ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதால் பிரத்யேகமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like