1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கார்டுகளுக்கு இலவச மாஸ்க்! அரசாணை வெளியீடு!!

ரேஷன் கார்டுகளுக்கு இலவச மாஸ்க்! அரசாணை வெளியீடு!!


தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்காக 13.48 கோடி முகக்கவசங்கள் வாங்கப்படவுள்ளன. இந்த முகக்கவசங்களை வாங்குவதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like