ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் முன்னாள் முதலமைச்சர்!
ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக ஹைதராபாத்துக்கு சென்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதனால் கெடுபிடி அதிகமாக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று ஆந்திர எல்லைக்குள் வந்தால் அம்மாநில அரசு சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தக்கூடும். ஆந்திரா வந்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் சென்றாலும் தெலங்கானா அரசால் 14 நாட்கள் தனிமைப்படுவார். இதனால் ஹைதராபாத் இருந்தபடியே சந்திர பாபு நாயுடு கட்சி நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் பேசி வருகிறார்.
newstm.in