1. Home
  2. தமிழ்நாடு

தொகுதி மக்களுக்காக , களமிறங்கிய தி.மு.க எம்.எல்.ஏ !!

தொகுதி மக்களுக்காக , களமிறங்கிய தி.மு.க எம்.எல்.ஏ !!


இந்தியாவில் பரவி வரும் கொரோனா தமிழகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த உதவிகளும் தமிழகத்தில் பெரும்பாலான ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை எனவும் பாதுகாப்பு உபகரணமின்றி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலர் பணியாற்றி வருவதாகவும் எதிர் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தி.மு.க அமைப்புகள் சார்பில் தூய்மை பணியாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இளைஞரணியைச் சேர்ந்த பலரும், நிர்வாகிகளும் நேரடியாக உதவித் தேவைப்படுவோர் இல்லங்களுக்குச் சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் இளைஞரணி துணை செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதியில் பல்வேறு உதவிகளை வழங்கினார். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தனது சொந்த நிதியில் இருந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கிருமிநாசினி தெளிக்க பயன்படும் வாகனத்தை பெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடமும் பேசி வாகனத்தைப் பெற்று பணியை துரிதப்படுத்தியுள்ளார். இன்று அதிகாலை முதலே பணியை துவக்கி வைத்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி தானே கிருமிநாசினிகளை சாலைகளில் தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like