1. Home
  2. தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் உணவு இலவசம்!

அம்மா உணவகங்களில் உணவு இலவசம்!


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. எல்லா தரப்பு மக்களும் சாப்பிட்டு 3 வேளையும் பசியாறி வருகின்றனர். சில தன்னார்வ அமைப்பாளர்களும் சில அம்மா உணவகங்களில் சாப்பிடும் மக்களுக்கு ஆகும் தொகையை வழங்கி வந்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like